Thursday, March 15, 2012

என்ன நடந்தால் நமக்கு கோபம் வரும்? Srilanka's Killing Fields

லட்சம் கோடி கொள்ளை அடித்த போது கோபம் வரவில்லை ஏன்னா அம்பானி பணக்காரன் ஆவதில் நமக்கு அக்கரை இல்லை, அடுத்த வீட்டுக்காரன் ஒரு கார் வாங்கினால் பொறுக்காது.


கச்சத்தீவில் இந்திய மீனவன் செத்து மடிந்தாலும் கவலை இல்லை, ஞாயிற்றுக்கிழமை வஞ்சரம் கிடைத்தால் சரி.

ஈழத்தில் தமிழ் மக்களை கொன்று குவித்தாலும் சரி, நம் மக்கள் இங்கு நலமாக இருந்தால் போதும்.


முத்துகுமரன் , செங்கொடி இருந்தால் என்ன செத்தால் நமக்கு என்ன?


அன்று கடற்கரை ஓரம், மனைவி ஒருபுறம் துணைவி மறுபுறம் புடைசூழ உண்ணா விரதம் இருந்தார், போர் நிற்கும் என்றார், நம்பினோம்.

மத்திய அரசை நிர்பந்திக்க அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் போர் நின்றுவிடும் என்றார்கள் நம்பினோம்.

போர் நிற்காவிடில் கடல் கடந்து சென்று புலிகளுடன் இணைந்து போர் புரிவேன் என்றார், நம்பினோம்.

போரும் நிற்கவில்லை, ராஜினாமாவும் செய்யவில்லை, கடல் கடந்தும் செல்ல வில்லை.. கோபமும் வரவில்லை.

இலங்கைக்கு வேவு பார்க்க ராடார் கருவி தந்தது மட்டும் அல்லாமல், நம் மக்கள் செத்து மடியும் பொழுது கண்ணை மூடிக்கொண்டு வாழ்ந்தோம் என்பது கேவலம் அன்றி வேறொன்றும் இல்லை.










பெண்களை மான பங்க படுத்தி, குழந்தைகளை கொன்று, உன்ன உணவும், காயங்களுக்கு மருந்தும் தர மறுத்த நாட்டினை தன் நாடு என்று ஏற்றுகொள்ள எப்படி முடியும்?


உலகம் உற்று நோக்கும் போரின் நடுவே இந்த நிகழ்வுகள் நடக்கும் போது, நாளை தம் மக்கள் ஆயினும் தமிழ் மக்கள் தானே என்று வேரறுக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

இத்தனை நடந்தும்,  இந்திய வெளிஉறவு அமைச்சர் "இந்தியா எடுக்கும் எந்த முடிவும், இலங்கையுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவை பாதித்து விடும்' என்று சொன்னால்

இதை கண்டும் கோபம் வர வில்லை என்றால் என்று தான் வரும்?




Do you like it? If yes don't forget to vote for it.

No comments:

Post a Comment