Tuesday, April 5, 2011

Vadivelu on Vijayakanth

"தலை பெருசா இருந்தா மட்டும் தலைவன் ஆகிவிட முடியாது"

"கேப்டன் என்றால் யார்? பாகிஸ்தானையும் இலங்கையையும் வீழ்த்திய டோனிதான் உண்மையான கேப்டன்" 

"உங்கள் குழந்தைகள் முன் என்னை நிறுத்தினால் அந்த குழந்தைகள் சிரிக்கும். ஆனால் அந்த விஜயகாந்த்தை நிறுத்தினால் பூச்சாண்டி என்று கத்தி அழும்." 

"வேட்பாளரை ஏன் அடித்தீர்கள் என்று கேட்டால் என் கையால் அடி வாங்கியவன் மகாராஜன் ஆவான் என்று விளக்கம் சொல்கிறார். அப்படி என்றால் கட்சியை கலைத்துவிட்டு ஒவ்வொருவரையும் கூப்பிட்டு மூக்கிலேயே குத்தி மகாராஜன் ஆக்க வேண்டியதுதானே."

"அந்த கட்சி பெயர் கூட வாயில் வரமாட்டேங்குது. ஏதோ நாக்கு மூக்காவா, தேக்கு மூக்காவா, ஏதோ சொல்றாங்க. முதல் அமைச்சர் என்று சொல்லிக்கொள்வதோடு அல்லாமல், 2 ரூபாய்க்கு ஒரு தொப்பியை வாங்கி தலையில் மாட்டிக்கொண்டு, அதேபோல் கண்ணாடி, கர்சிப் வாங்கி மாட்டிக்கிட்டு போஸ் கொடுக்கிறார். கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொள்கிறார். பள்ளிக்கூடத்தில மாறுவேடப் போட்டியில போட வேண்டிய வேஷத்தையெல்லாம் பப்ளிக்காப் போட்டுக்கிட்டு பேசினா எப்படி." 

"கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துறாங்களாம். இதுகுறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, முதல் ரவுண்டு முடிஞ்சிருக்கு, ரெண்டாவது ரவுண்டு முடிஞ்சிருக்குன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. கடைசிலதான் அது தண்ணி அடிக்கிற ரவுண்டுன்னு எல்லோருக்கும் புரிஞ்சது." 
Do you like it? If yes don't forget to vote for it.

No comments:

Post a Comment